மொழியின் அடி ஆழத்தில் தழிழ் பண்பாட்டின் நீரோட்டமாய் நகர்கிறது.
கவிஞர் வைரமுத்துவின் கவிதை நதி. ஒளி ஊடுருவும் சொற்களால்
சகமனிதனை நேச பாசத்துடன் தொட்டுப் பேசுகிறது.
வண்ணங்களை ஓவியன் பயன்படுத்துவதுபோல் இயற்கையைத் தனது
வெளிப்பாட்டு சாதனமாக கையாள்கிறது. சங்க இலக்கியம்போல்
இயற்கையை பேசி அதன் மூலம் தன்னையே பேசிவிடும்
சாகசத்தை நிகழ்த்தி விடுகிறது.
வாய்மொழி இலக்கியத்தின் சுரங்க அறைக்குள் இருக்கும் புதையலை
எடுத்து இலக்கிய மொழியை சிங்காரித்து விடுகிறது. கணிப்பொறியில்
இருந்து கைதியின் கடைசி இரவு வரை தற்கால வாழ்க்கையின்
சகல பரிமாணங்களையும் பேசுகின்றன இக்கவிதைகைள்.

ConversionConversion EmoticonEmoticon