ஆறறிவுடைய மனிதன்

தினமும் சாலையில் செல்லும்
அடையாளம் தெரிந்த  மக்கள்  நடையோட்டம்
மார்கழிக்காக   ஏங்கித்தவிக்கும்  பூச்செடிகள்
வயது  ஆகியோ  யாரோ  தள்ளிவிட்டு
விழும்  இலையுதிர்  கால  இலைகள்
மொத்த பலத்தையும் காட்டும்  மழைவெயில்  காலங்கள்
வாசலை  நிரைக்கும் கோலங்கள்
மேய்ச்சலுக்கு  அதே   வழியில் செல்லும் பிராணிகள்
வழக்கமான  நிதர்சனம்  உள்ள  அன்னிச்சைகள்
வாழ்வில் தினம் நிகழும்  தன்னிச்சைகள்

கரையான்   வாழ்வை  கெடுத்த
பிளாஸ்டிக்   சேர்கள்
ஒளி  தந்தும்  தூக்கில்  தொங்கும்
‘தண்டணை  பல்புகள்
சில  வருடங்களில்   மாறும்
சக்காலத்தி  பெயிண்டுகள்
நரை  முடிகள் வளராத
வீட்டு   கடிகாரங்கள்

தினம்  தினம்  நடப்பதை
அன்றாடம் என
வைத்து  கொண்டு
புதுமையை   இழந்து
இன்பம்  இதுயென  நினைத்தே
வாழ்வை   கரைக்கிறான்

ஆறறிவுடைய  மனிதன் !

Previous
Next Post »